சொன்ன சொல்லைத் தட்டாத குழந்தை என்று கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் சொன்ன சொல்லைத் தட்டும் குழந்தையை மட்டும்தான் பார்க்க முடிகிறது. அதிலும் தமிழ் பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ், இதைச் செய்யாதே என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அதைச் செய்துவிட்டு வந்து நின்றால்தான் அவளுக்கு நிம்மதி. முதலில் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. சரி எதையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்வது தான் நல்லது என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு தான் அவளின் தந்திரத்தை நான் கற்றுக் கொண்டேன். அதாவது காலையில் எழுந்ததும் பாலை ஆற்றி அவள் கையில் கொடுத்துவிட்டு, இது எனக்கு. நீ குடிக்கவேக் கூடாது. குடிச்சிட்டு காலி பண்ணிட்டா.. எனக்கு ரொம்ப கோவம் வந்துவிடும் என்று சொன்னால் போதும்.. அடுத்த நொடியில் பால் காலியாகி டம்ளர் நமது கைக்கு வந்துவிடும். கீழே கிடக்கும் அவளது பொம்மைகளைப் பார்த்து, இதெல்லாம் கொண்டு போய் உன்னுடைய அலமாரியில் வைக்காதே என்று மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக அலமாரியில் அலங்கரிக்கப்பட்டுவிடும். புதிதாக எதையாவது அவளுக்குக் கொடுத்து உண்ண வைக்க விரும்பினால் அதை அவள் தொடவே மாட்டாள். அப்போதும் இதே வழிமுறைதான். இது தமிழுக்கு அல்ல, ல. நீ கடித்து சாப்பிடக் கூடாது. வேண்டாம் என்று கையில் கொடுத்துவிட்டு மிரட்டினால் போதும் மிகவும் மகிழ்ச்சியாக அவற்றை உண்டுவிடுவாள். ம்ம்ம்... இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் போகும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்...
| வாசலை உருவாக்கியவர் | Vanisri Sivakumar |
| கடைசியாக மாற்றப்பட்டது | ஜூன் 23, 2009 2:29:58 PM IST |