Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

நிறைவேறிய வேண்டுதல்

சில விஷயங்களை நாம் விளையாட்டாகச் செய்து அது நிஜமாகவே நடந்தால் நம்முடைய மனம் எப்படி இருக்கும். ஆம் அப்படித்தான் இன்று அதிகாலை 4 மணியளவில் இருந்தது என் மனம்.

என் குழந்தையின் பெயர் தமிழ்செல்வி என்பது பலரும் அறிந்தது.

நானும் அவளும் இரவு நேரத்தில் தூங்கும்போது சிறிது நேரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம். அவள் விநாயகர் அகவல் சொல்லி 10 திருக்குறள் சொல்லி முடித்ததும் நான் ஏதாவது கதை சொல்வது வழக்கம்.

அதுபோல் நேற்று

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை
- என்ற திருக்குறளை அவளுக்கு சொன்னேன். அப்போது அவள் மழை என்றால் என்ன என்று கேட்டால்.

அதற்கு நான், பூமியில் எப்போது நீர் காலியாகிவிடுகிறதோ அப்போது வானத்தில் இருந்து கடவுள் தண்ணீர் ஊற்றுவார். அதுதான் மழை. இப்போதெல்லாம் ரொம்ப மழை பெய்வதில்லை. உன்னைப் போன்ற குழந்தைகள் மழை வர வேண்டும் என்று சாமியிடம் பிரார்த்தித்தால் நிச்சயமாக மழை பெய்யும்.

நான் சொல்வது போல சொல்கிறாயா என்று கேட்டு, கடவுளே எங்கள் பகுதியில் ரொம்ப நாளா மழை பெய்யவில்லை. மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளச் சொன்னேன். அவளும் அதுபோல சொல்லிவிட்டு கண் மூடித் தூங்கிவிட்டாள்.

அதிகாலை 4 மணியளவில் சின்ன சத்தம் கேட்டு நான் விழித்துப் பார்த்தபோது, பயங்கரமான மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. எனக்குள் பரவிய மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.

உடனடியாக என் குழந்தையின் முகத்தின் மீது முகம் வைத்து, மெல்ல குரல் கொடுத்தேன். அவளும் என்ன அம்மா என்று கேட்டாள். நீ நேற்று மழை வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாயல்லவா? இப்போ மழை பெய்து கொண்டிருக்கிறது என்றேன் மகிழ்ச்சியாக.

அப்படியாம்மா.. வீட்டுக்குள்ளயா? வெளியவா? என்று குழந்தைத்தனமாக கேள்விக் கேட்டாள். வெளியடா என்று சொல்லி தட்டிக் கொடுத்து தூங்க வைத்தேன்.

இதனை பலரும் இதெல்லாம் ஒரு எதிர்பாராத நிகழ்வுகள் என்று சொல்லலாம். ஆனால் நான் உண்மையில் நம்புகிறேன். என் குழந்தையின் வேண்டுதல் நிறைவேறிற்று என்று....

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

மறுமொழிகள்

Re: நிறைவேறிய வேண்டுதல்
அம்மாவும் பொண்ணுமா சேர்ந்து மழைய வரவெச்சு என்னை எக்ஸாமுக்கு நெனஞ்சிக்கிட்டே போக வெச்சிட்டீங்களே.. -தல.
கைதுறப்பு