செங்கல்பட்டை அடுத்து கருங்குழி எனும் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோயிலில் (சிவாவின் குல தெய்வம்) இந்த விழா நடைபெற உள்ளது.
சுற்றத்தார் அனைவரையும் அழைத்தாகிவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
மிகவும் பயத்துடன்தான் நான் இருக்கிறேன். நானும் சிவாவும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதால், எங்கும் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
நல்லபடியாக விழா நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நினைவேறுகிறது…