Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

கடவு‌ளிட‌ம் கே‌ட்க‌ மா‌ட்டே‌ன்



விம்பிள்டன் மூத்த டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷே எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

1983ஆம் ஆண்டு அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலமாக எய்ட்ஸ் நோய் அவரை தாக்கியது.

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனான ஆர்தர் ஆஷேவிற்கு எய்ட்ஸ் நோய் என்று தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் தங்களது அனுதாபங்களை கடிதங்களாக தெரிவித்தனர்.

அந்த கடிதங்களில் ஒன்றில், உங்களுக்கு ஏன் இவ்வளவு கொடிய நோயை கடவுள் அளித்தார்? என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஆர்தர், "உலகத்தில் 50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாடுகிறார்கள். 5 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட கற்றுக் கொள்கிறார்கள். 5 லட்சும் பேர் டென்னிஸ் விளையாட்டை முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். 50 ஆயிரம் பேர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கின்றனர். அதிலும் 5000 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டன் போட்டியை அடைகின்றனர். அதில் 4 பேர் அரையிறுதிக்கும், 2 பேர் இறுதிக்கும் தகுதி பெறுகின்றனர். ஆனால் வெற்றி வாகை சூடி அந்த விம்பிள்டன் கோப்பையை என் கையில் ஏந்தும்போது நான் கடவுளிடம் கேட்கவில்லை, இதற்கு `ஏன் நான்?'என்று. அப்படி இருக்க எனக்கு வலியை கொடுக்கும் இந்த வியாதி என்னை பிடிக்கும்போது மட்டும் நான் எப்படி கேட்பேன். இந்த நோய் எதற்கு எனக்கு என்று?

இ‌ப்படி வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்து‌வ‌த்தை ஒரே வா‌க்‌கிய‌த்‌தி‌ல் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் ஆ‌ர்த‌ர். ஆனா‌ல் அ‌ப்படி‌யிரு‌க்க‌வி‌ல்லை நா‌ம். ச‌ந்தோஷ‌த்‌தி‌ல் து‌ள்ளு‌ம்போது கடவுளு‌க்கு ந‌ன்‌றி சொ‌ல்வது கூட ‌கிடையாது. ஆனா‌ல் துக்‌க‌த்‌தி‌ல் ஏ‌ன் என‌க்கு இ‌ந்த ‌நிலை எ‌ன்று கடவு‌ள் ‌மீதே கு‌ற்ற‌ம் சும‌த்துவோ‌ம்.

ம‌ன‌ப்பா‌ன்மையை நா‌ம் (கு‌றி‌ப்பாக நா‌ன்) மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

மறுமொழிகள்

Re: கடவு‌ளிட‌ம் கே‌ட்க‌ மா‌ட்டே‌ன்
மக்களாகிய எமக்கு இருக்கும் தீய பழக்கத்தை போக்குவதற்கு டென்னிஸ் வீரரின் தத்துவத்தை எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எம் எல்லோரிடமும் காணப்படும் தீய பழக்கவழக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. eelam.mywebdunia.com
Re: கடவு‌ளிட‌ம் கே‌ட்க‌ மா‌ட்டே‌ன்
இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கும்போது என் ஒருவனை மட்டும் அறிவாளியாக படைத்ததற்கு நான் கடவுளிடம் ஏன் என்று கேட்கமாட்டேன்... -தல
கைதுறப்பு