திட்டமிட்டு கொல்வதற்கும், சூழ்நிலை காரணமாக கொலை செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போது பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பத்திரிக்கையில் ஸ்டவ் வெடித்து பெண் கொலை, கிணற்றில் தள்ளி பெண் கொலை என்ற காலம் மாறி, இரட்டைக் கொலையில் சதி திட்டம் தீட்டிய பெண் சிக்கினார், துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் கள்ளக்காதலி சிக்கினாள், தோழியை எரித்துக் கொன்று காதலனுடன் தப்பியோடிய மாணவி சிக்கினார் என்றுதான் பத்திரிக்கையில் செய்திகள் நிரம்புகின்றன.
பலருடன் திருமணம், பலரை மிரட்டி பணம் பறித்தல், திட்டமிட்டு கொலை செய்தல், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்தல் போன்றவற்றை துல்லியமாக செய்துள்ளார் சமீபத்தில் இரட்டைக் கொலையில் பிடிபட்ட சங்கீதா என்ற பெண்.
கள்ளக்காதலனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி 4 மாவட்டங்களில் அதனை வீசி மிக சாதுர்யமாக கொலைச் செயலில் ஈடுபட்டுள்ளார் ஒரு பெண்.
இதையெல்லாம் விஞ்சும் விதத்தில், தோழியை தனது வீட்டில் எரித்துக் கொன்றுவிட்டு, அதனை தான் தற்கொலை செய்து கொண்டது போல் ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டு (தன் குடும்ப மானம் போகக் கூடாது என்றும், தன்னை குடும்பத்தினர் தேடக் கூடாது என்றும்), காதலனுடன் தப்பித்துச் சென்றுள்ளார் கல்லூரியில் படிக்கும் மாணவி.
இவையெல்லாம் சமீபத்தில் பத்திரிக்கைகளை அலங்கரிக்கும் செய்திகள்.
பெண்களை மலருக்கும், தென்றலுக்கும், நிலவுக்கும் ஒப்பிட்ட கவிஞர்கள் இதனைக் கண்டால் ரத்தக் கண்ணீர் வடிப்பார்களே. ஆண்களுக்கு சமமாக எல்லாத் துறைகளிலும் வளர வேண்டும் என்று பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொண்ட இவர்கள் குற்றத்தில் ஆண்களை விட உசந்து நிற்க எண்ணிவிட்டனரா?
பூமிக்கும், நதிக்கும் பெண்களின் பெயரை சூட்டி மகிழ்ந்த மக்களை இந்த செய்திகள் நையாண்டி செய்வது போல் அல்லவா உள்ளது...
போனது போகட்டும்... தீயவைகளை அழித்து நல்லவைகளை காப்பதே பெண் குலத்தின் குணம். அதனால்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறினார்கள்.
அதைவிடுத்து அழிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டாம் பெண்ணே...
நினைவேறுகிறது…
மறுமொழிகள்