அந்த இரவல் பட்டியலில் முதலிடம் பிடிப்பது பேனாதான். நம்மிடம் சில்லறை இல்லாமல் ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை வாங்குவதும் இரவல் வகைதான்.
அதுபோல், ஒவ்வொரு முறையும் இரவல் வாங்கும்போது நமக்குள் ஒரு சின்ன குற்ற உணர்ச்சி மேலிடுவதையும் உணர்வோம். அதனை எதிர்காலத்தில் தவிர்க்கவும் எண்ணுவோம்.
ஆனால் எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அவர்களது பரம்பரை வியாதியே இரவல் வாங்குவதுதான். ஒரு நாளைக்கு ஒரு பொருளையாவது இரவல் வாங்காமல் போனால் அவர்களுக்கு ஊண், உறக்கம் கிடையாது.
அவர்களது இரவல், மிக்ஸியில் இருந்து, பேனா, தலைவாரும் சீப்பு, டிவி ரிமோட், சட்னி, நகம் வெட்டும் கருவி, சிடிக்கள், ஸ்டேப்ளர், டேப் என நீண்டு கொண்டே இருக்கும்.
இதில் பிரச்சினை என்னவென்றால், அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை மட்டும் இரவல் வாங்க மாட்டார்கள். ஒருவரது வீட்டில் ஏதாவது பொருளை பார்த்துவிட்டால் அதற்கான தேவையை உண்டுபண்ணி அந்தப் பொருளை இரவல் வாங்கி பயன்படுத்திவிட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போவார்கள்.
இதுவரை அவர்கள் கேட்காதது, ஏற்கனவே ஒருவர் பல் துளக்கிய பிரஷ் மட்டும்தான் என்பது எனது கணிப்பு.
இவர்களிடம் சிக்கிக் கொண்டு அல்லாடும் அக்கம் பக்கத்தினரின் நிலைதான் கவலைக்குறிய விஷயம். ஏதாவது ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தக் கூட பயந்து கொண்டு மறைத்து மறைத்து பயன்படுத்தும் நிலை உள்ளது.
தர முடியாது என்று கூறினால் தேவையில்லாமல் மனஸ்தாபம் ஏற்படுமே என்பதுதான் அவர்களது கவலை.
சரி இவர்கள் இப்படித்தான்.. இரவல் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்