ஒன்றுக்கே இங்கு திண்டாடிப் போய்விடுகிறோம். 7 என்றால் சும்மாதானா... அந்த பெண்மணியை நினைத்தால் ஒரு பக்கம் மலைப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது. இதில் இன்னொரு கொசுறு தகவல் என்னவென்றால் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருக்கின்றதாம்.
இதோடு சேர்த்து 10 குழந்தைகள். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டதன் பின்விளைவுகள்தான் இந்த குழந்தைகள்.
சரி அப்படி என்னதான் நடந்திருக்கிறது? 3 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பிய கமிஸ் சில ஆண்டுகளாக கர்பமாகாமல் இருந்துள்ளார். அதற்காக மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவர்கள் அளித்த மருந்தின் விளைவே இந்த 7 குழந்தைகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த பெண்ணின் வயதையும், முன்னரே குழந்தைகள் இருப்பதையும் அறிந்த மருத்துவர்கள், அப்பெண்ணிற்கு குழந்தை பிறப்பிற்கான சிகிச்சை அளித்திருக்கக் கூடாது.
அந்த சிகிச்சையின் பலனாகத்தான் இப்போது 7 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுபோன்ற பிரசவத்தில் குழந்தைகளுக்கும், தாய்க்கும் பெரும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல மூத்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தைகள் பெற்ற ஒரு பெண்ணிற்கு இதுபோன்ற சிகிச்சையை அளித்திருக்கவேக் கூடாது. இது பல உயிர்களுக்கு ஆபத்தானதாகியிருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நினைவேறுகிறது…
மறுமொழிகள்