தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான்.
தாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், தொலைபேசி அடிக்கிறது, உங்கள் குழந்தை அழுகிறது, குழாயில் குடிநீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, மாடியில் காய வைத்த துணி மழையில் நனையத் துவங்குகிறது.
இதில் முதலில் நீங்கள் எதை எதிர்கொள்வீர்கள்?
சரியான முடிவை மனதில் தேர்ந்தெடுத்துக் கொண்டு அடுத்து வருவதை படியுங்கள். இதைப் படித்த பிறகெல்லாம் முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது.
உங்களைப் பற்றி படிக்கலாமா?
நீங்கள் முதலில் தொலைபேசியை எடுத்துப் பேசியிருந்தால் உங்களது வாழ்வில் வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள்.
அல்லது உங்கள் குழந்தையை சமாதானம் செய்தால் உங்களது குடும்பத்திற்கே அதிக முக்கியத்துவம்.
ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்திருந்தால் உங்களது வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் தான் முன்னிலையில் இருப்பர்.
அதில்லாமல், மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணியை கொண்டு வந்திருந்தால், தாம்பத்ய வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீங்கள் வழிந்தோடிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தினால் பணம், சொத்து தான் உங்கள் முதல் குறிக்கோள்.
என்ன புரிந்து விட்டதா உங்களைப் பற்றி? நான் சொன்னதில் தவறில்லையே?

நினைவேறுகிறது…
மறுமொழிகள்