Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

கலைவா‌ணி

நா‌ன் ‌கிறு‌க்‌கியவை



வாய்விட்டு அழவும்
மனம்விட்டு பேசவும்
சிந்தனைகள் தெளியவும்
முடிவுகளை மாற்றவும்
திட்டங்களை வகுக்கவும்
இயலாமல் போனது
நீ
இல்லையாதலால்

நீ இல்லாததால். . .
என் அருகாமை
வெற்றிடமாய்,
உன்னிடம்
எதையும் சொல்லாததால்
என் மனம்
பாரமாய்.

நான் உன்னுடனே வாழ்ந்து
விடுகிறேன்
என்னுடன் நீ இல்லாமல் போனாலும்

நான் உன்னுடனே பேசிக்
கொள்கிறேன்
என்னிடம் நீ பேசவில்லையென்றாலும்

நான் உன்னிடமே அழுது
விடுகிறேன்
நீ ஆறுதல் சொல்லாத போதிலும்

நானே என் தவறை திருத்திக்
கொள்கிறேன்
என்னை நீ கண்டிக்காத போதிலும்

உன்னை நேரில் காணாமலே
கனவில் கண்டு கொண்டிருக்கிறேன்
கனவிலாவது கண்டுகொண்டிருக்கிறேனே
என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வாழ்வே நீதான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்
உன்னைக் காண மட்டுமே விழித்து கொண்டிருக்கிறேன்

கனவிற்காகவே உறக்கத்தை நாடுகிறேன்
கனவிற்காகவே உற்சாகம் அடைகிறேன்

வேறு வேறு ரசனை
கொண்ட
நம் இருவருக்கும்
நட்பில் மட்டும்
ஒரே ரசனை


குடை இருந்தும்
மழையில் நனைந்தது
பசி இருந்தும்
சாப்பிடாமல் கிடந்தது
வெகுநேரம்
தனிமையில்
அமர்ந்து பேசியது...
போன்ற எல்லா
நினைவுகளும்
என்னிடம் இருக்கிறது
நீ மட்டும்....

மீண்டும் ஒரு முறை

சண்டையிட்ட போதெல்லாம்
சேர்ந்துவிட்டோம்
சண்டையில்லாமலேயே
பிரிந்திருக்கிறோம்.
சண்டை போடவாவது சேர வேண்டும்
மீண்டும் ஒரு முறை


மறுமொழிகள்

Re: கலைவா‌ணி
மிகவு‌ம் அருமை !!
Re: கலைவா‌ணி
கவிதை ‌மிகவு‌ம்
Re: கலைவா‌ணி
Awesome Vani...
Re: கலைவா‌ணி
‌மிகவு‌ம் ந‌ன்‌றி
Re: கலைவா‌ணி
வாணி நா‌ன் அமெரிக்கா வந்த்த ‌பிறகு தா‌ன் எந்நுடைய தநிமை எ‌னக்கு புரிந்தது. ‌மிகவு‌ம் அழகிய கவிதை!
கைதுறப்பு