Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

அலைபாயுதே - எவனோ ஒருவ‌ன்

என‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்த பாட‌ல்.



எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டி‌ல் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் ரகசியம் புறியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)

மறுமொழிகள்

Re: அலைபாயுதே - எவனோ ஒருவ‌ன்
அற்புதம்...ஸிம்ப்லி ஸுபர்ப்!
Re: அலைபாயுதே - எவனோ ஒருவ‌ன்
‌‌பிளா‌க் படி‌க்க வ‌ர்றவ‌‌ங்க எ‌ன்ன எ‌தி‌ர்பா‌ர்‌ப்பா‌ங்க‌ன்னு ‌நீ‌ங்க ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ள்
Re: அலைபாயுதே - எவனோ ஒருவ‌ன்
குறிப்பிட்டு சொல்லும்படி எதையுமில்லை கலைவாணி (if I can call you so). இதயத்திலிருந்து வரும் எதையும் எழுதுங்கள். அது இதயத்தைத் தொடும். மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விழைந்தால் உங்கள் எழுத்தும் வியாபாரமாகி விடும். உங்கள் தமிழ் நான்காவது தமிழ். இதயத்தமிழ். அது உயிரோடு உறவாடும் உயிர்த்தமிழ். நீங்கள் ஏன் உங்கள் அழகு தமிழை அச்சிலேற்றக் கூடாது?
கைதுறப்பு