"வாப்பா ஆள் ரொம்ப மாறிட்டியே: பழைய ராமு மாதிரியே இல்லையே!
நான் ராமு இல்லை.
அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா பேருமா மாறிப் போச்சு."
அப்பா சமையல்
சாப்பாடே சரியில்லை. முதலில் சமையல்காரனை மாத்து..
என் அப்பாவத் தவிர வேறு யாரும் சமைக்கரத என் அம்மா ஒத்துக்க மாட்டாங்கடா"
சட்டை
"ஏண்டா... கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே.. எங்கே?
அவன் சட்டையே போடலீங்க சார்"
இரவல் கேட்டு
"சில பேர் மாதிரி குடை, செருப்புன்னு இரவல் கேட்டு நான் வரமாட்டேன்.
இப்ப எதுக்காக வந்தீங்க?
கூலிங் கிளாஸ் இருந்தா இரவல் குடுங்க."
விருந்து
"ஏகப்பட்ட விருந்து நடக்குது. எதுக்குமே போக முடியல...""
ஏன் உடம்பு சரி இல்லையா?
நீங்க வேற... யாருமே கூப்பிடலை"
குளிக்கும்போது
குளிக்கும்போது ஷாம்பு போடணுமா? சீயக்காய் போடணுமா?
ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா?
பாத்ரூமில் தாழ்ப்பாள் போட்டுக் குளிப்பதுதான் நல்லது!
இரட்டைக் குழந்தைகள்
ஜக்கு: இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
மக்கு: அப்படியா! அவனுக்கென்ன வயசு இவனுக்கென்ன வயசு?"
காஞ்சிபுரம் இட்லி
ஜக்கு: காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே?
மாக்கு: என் காதுலே காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்!

நினைவேறுகிறது…
மறுமொழிகள்