சிறைச்சாலை அதிகாரிகள் கழகத்தின் துணை மேலாளர் க்ளைன் டிராவிஸ் அளித்த வானொலி பேட்டி ஒன்றில், பிரிட்டிஷ் கைதிகளுக்கு செல்பேசி, போதை மருந்து ஏன் பெண்கள் கூட கிடைக்கின்றன. அப்புறம் அவர்கள் ஏன் தப்பிச் செல்லப் போகிறார்கள் என்று கேட்டுள்ளார்.
சிறையில் தற்போது போதைப் பொருட்கள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் கடத்தலும் அதிகமாக நடக்கிறது என்றும் டிராவிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சிறைகளில் இருந்துதான் கைதிகள் தப்பித்துச் செல்ல முனைவார்கள். ஆனால் கிழக்கு யோர்க்ஷைர் பகுதியில் உள்ள எவர்தோர்ப் சிறைச்சாலையில் வெளியில் இருந்து ஆட்கள் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிறைச் சுவரை ஏறி குதித்து சிறைக்குள் வருகின்றனர். அந்த சிறைச்சாலையில் இதுவரை ஒரு கைதி கூட தப்பித்துச் செல்ல முயற்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
போதைப் பொருளை சிறைக்குள் கொண்டு வரும் நபர்கள் நள்ளிரவில் மதில்சுவர்களில் ஏணிகளைப் போட்டு ஏறி வருகின்றனர். மதில்சுவரின் மறுபக்கத்தில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் இரவு முழுவதும் அந்த ஏணியை அப்படியே வைத்திருக்கின்றனர். அதிகாலையில் போதைப் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு கூட்டாளி திரும்பியதும் தான் அந்த ஏணி சுவரில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த ஏணிகளை ஒருபோதும் இந்த சிறையில் இருக்கும் சுகவாசிகள் தப்பிக்கப் பயன்படுத்தியதே இல்லை என்கிறார் மிக வருத்தத்துடன் டிராவிஸ்.
சமுதாயத்தில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும், விபச்சாரம் செய்பவர்கள் மற்றும் தவறான காரியங்களில் ஈடுபடுபவர்களையும் தான் கைது செய்து நாம் சிறைக்குள் அடைக்கிறோம். ஆனால், சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு இவை அனைத்தும் எவ்விதத் தடையும் இன்றி கிடைப்பது வேதனைக்குரிய விஷயம் என்று மனமுடைந்து பேசினார்.
அதிக அளவிலான போதைப் பொருள் சிறைக்குள் வருகிறது. வெளியில் கிடைப்பதை விட மலிவான விலையிலும் போதைப் பொருள் சிறைக்குள் கிடைக்கிறது (பிரச்சினை இல்லாமல் விற்றுவிட்டுச் செல்வதால் விலையைக் குறைத்து விற்கிறார்களோ) என்பது இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமாகும் என்றார்.
தற்போது பிரிட்டன் சிறைச்சாலைகளில் போதுமான அதிகாரிகளும் இல்லை. மேலும் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. '
சிறைச்சாலைகளுக்கு செலவிடும் தொகையை குறைக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. ஆனால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தையே கேள்விக் குறியாக்கி விடுகிறது. பாதுகாப்பாற்ற சிறைச்சாலைகளினால் சமுதாயத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
என்ன நாமும் பிரிட்டிஷ் சிறைச்சாலைக்குப் போய்விடலாமா? வாடகை கட்ட வேண்டாம், கரண்ட் பில், போன் பில் என எதுவும் கட்ட வேண்டாம்... (போக்கிரி விஜய் ஸ்டைலில் சொல்லிப் பாருங்கள்)
வகைகள்: Blog
2008
நினைவேறுகிறது…