Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை



ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.

மறுமொழிகள்

Re: வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை
நல்ல கவிதை. தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
Re: வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை
எதை‌ப் படி‌த்தாலு‌ம் ‌பிடி‌த்தவுட‌ன் அதனை தொகு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் பழ‌க்க‌ம் உ‌ண்டு. அதை தேடி‌ப் ‌பிடி‌த்து உ‌ங்களை‌ப் போ‌ன்ற ரசனையாள‌ர்களு‌க்காக இ‌ங்கு வழ‌ங்‌கினே‌‌ன். உ‌‌ங்க‌ள் பாரா‌ட்டு‌க்கு ந‌ன்‌றி. தொட‌ர்‌ந்து வா‌சி‌க்கவு‌ம். உ‌ங்களது ‌எ‌ண்ண‌ங்களை அ‌ளி‌க்கவு‌ம்.
Re: வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை
சுனாமி அதோ கடற்கரையில் மணல் குவியலையும் தாண்டி பிணக்குவியல்கள். காட்சி கண்டு கழுகுகளே கண்ணீர் விட்ட கதை. அபயம் என்று வந்தவரை அபாயத்தில் தள்ளிவிட்ட நீலக்கடலே..... சரித்திரத்தில் இடம் பிடிக்க இந்த சாதனையை செய்தாயா? மரணத்திற்கு பந்தி வைத்து வித விதமாய் விருந்து கொடுத்தாயே உனக்கும் மரணத்திற்கும் அப்படி என்ன உறவு? உங்கள் ஒப்பந்தம் தான் என்ன? கண் இமைக்கும் நேரத்தில் இதனை கல்லறைகளை கட்டி முடிக்க உன்னால் எப்படி முடிந்தது? பியாக்குவியல் பார்பதொன்றும் புதிதல்ல நமக்கு நம் வரலாற்று பக்கங்களை புரட்டினால் போர்களம் காணாத ஆட்சி உண்டா? ஆனால் இது வீர மரணம் அன்று . துரத்தி துரத்தி முதுகில் அல்லவா குத்தி புறமுதுகிட்டு இறக்கசெய்துவிட்டாய்? இது தமிழற்கு இழுக்கல்லவா? உனக்கு துணிவு இருந்தால் மறுபடியும் வா இதோ மார்பு காட்டி நிற்கிறோம் வீர மரணத்திற்காக......
கைதுறப்பு