Web Webdunia.com தமிழ் உலகம்
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 நினைவேறுகிறது…

• வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை



ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.
வகைகள்: மற்றவை
குறிச்சொற்கள்:

 மறுமொழிகள்

Re: வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை
நல்ல கவிதை. தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
Re: வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை
எதை‌ப் படி‌த்தாலு‌ம் ‌பிடி‌த்தவுட‌ன் அதனை தொகு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் பழ‌க்க‌ம் உ‌ண்டு. அதை தேடி‌ப் ‌பிடி‌த்து உ‌ங்களை‌ப் போ‌ன்ற ரசனையாள‌ர்களு‌க்காக இ‌ங்கு வழ‌ங்‌கினே‌‌ன். உ‌‌ங்க‌ள் பாரா‌ட்டு‌க்கு ந‌ன்‌றி. தொட‌ர்‌ந்து வா‌சி‌க்கவு‌ம். உ‌ங்களது ‌எ‌ண்ண‌ங்களை அ‌ளி‌க்கவு‌ம்.