Web Webdunia.com தமிழ் உலகம்
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 நினைவேறுகிறது…

• தடுப்பூசியா? அல்லது விஷ ஊசியா?



தடுப்பூசி போட்டு 4 சின்னஞ்சிறு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் நமது நெஞ்சை மட்டுமல்ல இந்தச் செய்தியைப் படித்த அனைவரது நெஞ்சையும் உளுக்கும் விஷயம்தான்.

ஓடி ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளை தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்ற பெற்றோர்கள்... தடுப்பூசி போட்டால் குழந்தைக்கு ஜூரம் வருமே என்று பயந்த தாய்மார்கள், ஊசி குத்தினால் வலிக்குமே என்று அஞ்சிய குழந்தைகள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்திருப்பார்களா இதனை....

ஒரு நோயும் தாக்கக் கூடாது என்பதற்காக தடுப்பூசிப் போட வந்தால்... உயிரேப் போய்விட்டதே.. ஆம் இறந்த பிறகு எந்த நோயும் வராது என்பதால்தான் தடுப்பூசி போடுங்கள் எந்த நோயும் வராது என்று உறுதியாக சொன்னார்களோ. இது தெரியாமல் போனதே பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு.

ஏதோ விதி வந்தது... முடிந்துவிட்டது என்று புறம்தள்ளி விட முடியாது இந்த சம்பவத்தை...

பிள்ளைகள் பறிபோன செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்போது எனது ஆவல் ஒன்றாகத்தான் இருந்தது... இது வன்முறைதான் என்றாலும் பெற்ற மனதிற்குத்தான் தெரியும்.. அதன் வலி... என்ன தெரியுமா... செய்தியின் கடைசியில்.. அங்கிருந்த மருத்துவமனை, ஊசி போட்டவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர் என்ற விவரம் சேர்க்கப்பட்டிருக்காதா என்பதுதான் அந்த ஆவல். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்று அப்புறம்தான் மனது கூறியது.

சரி... உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்து பாதுகாத்துள்ளது தமிழக அரசு... உடனடி துரித விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்கும் நடவடிக்கையை எடுக்காமல், குழந்தையை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியாம்.. அந்த 3 லட்ச ரூபாய் அங்கும் இங்கும் ஓடியாடுமா?... அம்மா... அப்பா.. என்று கொஞ்சி மகிழுமா? குழந்தைகளின் உயிருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதை விட... முக்கியமான காரியம்.. உயிரைப் பறிப்பதற்குக் காரணமானவர்களை தண்டிப்பதுதான் என்பது எனது வாதம்.

இந்தியன் இம்யூனோலாஜிகல் லிமிடட் என்ற நிறுவனம் தயாரித்த தட்டம்மை தடுப்பூசி மருந்துகள்தான் உயிரிழந்த குழந்தைகளுக்குப் போடப்பட்ட தடுப்பூசி மருந்தாகும்.

தவறு எங்கு நடந்தது என்று கண்டறிந்து உடனடி தீர்வை அளிக்கத் தவறினால் இரு அரசுகளும் தங்களது பதவியை இழக்க நேரிடும் என்பது ஐயமில்லை.

இது ஒரு சாதாரண விடயமும் இல்லை... குழந்தைகளின் உயிர் ஒரு மலிவான பொருளும் இல்லை....

இனி சுகாதார மையத்திற்கு தங்களது குழந்தையைத் தூக்கிச் சென்று தடுப்பூசி போட எந்த பெற்றோராவது எண்ணுவார்களா?

நோயாவது.. நாயாவது... குழந்தை உயிருடன் இருந்தாலே போதும் என்று அல்லவா எண்ணுவார்கள். இந்த எண்ணத்தை எத்தனை லட்சம் கொடுத்தாலும் எந்த அரசாலும் மாற்ற முடியாது.

லட்சம் லட்சமாக செலவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று விளம்பரப்படுத்திய அதே அரசு.. ஒரு சில ரூபாய்களில் தடுப்பூசியே வேண்டாம் என்று இலவச விளம்பரம் செய்து விட்டதே மக்களிடம்... இது சரியா...
வகைகள்: கட்டுரை

 மறுமொழிகள்

Re: தடுப்பூசியா? அல்லது விஷ ஊசியா?
hello, Pl understand, without vaccination we will not achieve to eradicate the small pox and other diseases, we should find out the route of administration of staff nurses and cold storage by Government of Tamilnadu. Because all the batches of the vaccines by tested by CRI, Kasuali and once convinced with quality and these batches are licenced for the public or private market. we will wait for the report from the central team reg this issue. iam informing once again dont talk bad against vaccinations. If vaccines are not invented agains such diseases, we will see the lot of incidence of diseases in the world. by Indian
Re: தடுப்பூசியா? அல்லது விஷ ஊசியா?
தடு‌ப்பூ‌சியை‌ப் ப‌ற்‌றியோ, தடு‌ப்பூ‌சி போடுவதை‌ப் ப‌ற்‌றியோ குறை சொ‌ல்வத‌ற்கு ஒ‌ன்று‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் தடு‌ப்பூ‌சி ப‌ற்‌றிய நமது எ‌ண்ண‌த்தையே இ‌ந்த ச‌ம்பவ‌ம் மா‌ற்‌றி ‌வி‌ட்டதே எ‌ன்பதுதா‌ன் எனது ஆத‌ங்க‌ம். எ‌ன் குழ‌ந்தை‌க்கு‌ம் அடு‌த்த வார‌ம் தடு‌ப்பூ‌சி போட வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறே‌ன். ஆனா‌ல் மனது இ‌ப்போது வே‌ண்டா‌ம் எ‌ன்றுதா‌ன் ‌‌‌நினை‌க்‌கிறது. அ‌ந்த எ‌ண்ண‌த்தை‌த்தா‌ன் இ‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ உ‌ள்ளே‌ன். இரு‌ந்தாலு‌ம் ‌நீ‌ங்க‌ள் கூறுவது மு‌ற்‌றிலு‌‌ம் உ‌ண்மை, அ‌தி‌ல் ச‌ந்தேகமே இ‌ல்லை. ந‌ன்‌றி வண‌க்க‌ம்