Web Webdunia.com தமிழ் உலகம்
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 நினைவேறுகிறது…

• தடா ‌நீ‌ர்‌வீ‌ழ்‌ச்‌சி த‌ந்த அனுபவ‌ம்

சொ‌ந்த அனுபவ‌ம்



கல்லூரியில் படிக்கும்போது சக மாணவ, மாணவியர் மட்டும் சேர்ந்து தடா நீர்வீழ்ச்சிக்கு போவது என்று திட்டமிட்டோம்.

எல்லோரும் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் மகிந்திரா வேனில் தடாவை நோக்கிப் பயணப்பட்டோம். போகும் சாலையெல்லாம் எங்கள் குரல் ஓசை காற்றைக் கிழித்துக் கொண்டு போனது.

தடாவை நெருங்கிவிட்டோம் என்றதும் இன்னும் ஆனந்தம் அதிகரித்தது. அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியாக அந்த கரடு முரடுச் சாலையில் எங்களது வாகனம் பழுதாகி நின்றது.

இன்னும் பல கிலோ மீட்டர் தூரங்கள் செல்ல வேண்டிய நிலையில் நடு வழியிலேயே வாகனம் நின்றதும் எங்களது முகங்களில் ஈ ஓட வில்லை. என்றாலும் மாணவப் பருவமாயிற்றே. கொஞ்சமும் சளைக்காமல் எங்களது பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஓட்டுனரும், அவரது உதவியாளரும் வாகனத்தை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர்.

எங்களது நடைப்பயணமும் இனிமையாகத்தான் இருந்தது. குறைந்தது 30 40 கிலோ மீட்டர்கள் நடந்திருப்போம். அந்த நீர்வீழ்ச்சியைக் கண்டதும் நடந்து வந்த கால் வலி எல்லாம் மறந்து ஒரே ஆட்டம், பாட்டம்.

மாலை வரை எங்களது சிந்தனை முழுவதையும் தடா மட்டுமே ஆக்ரமித்திருந்தது.

மாலை 3 மணி இருக்கும். எல்லோரும் அங்கிருந்து புறப்படுவது என்று முடிவெடுத்து கிளம்பத் துவங்கினோம். அப்போது வாகனம் சரி செய்யப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் வந்த வழியில் எங்களது கால்கள் பயணத்தை துவக்கின.

நின்ற இடத்திலேயே சக்கரங்கள் இன்றி நின்று கொண்டிருந்தது நாங்கள் வந்த வாகனம். அதைப் பார்த்ததும் கொஞ்சம் மட்டுமே அதிர்ச்சி. அங்கிருந்து எவ்வளவு தூரத்தில் பேருந்து போக்குவரத்து துவங்கும் என்பதை கூட எங்களால் அறிய முடியவில்லை.

இருந்தாலும் ஏதோ இன்னும் கொஞ்ச தூரத்தில் சென்று விடலாம் என்று சக மாணவன் ஒருவனின் வழிகாட்டலின் பேரில் நடக்கிறோம் நடக்கிறோம் நடந்து கொண்டே இருக்கிறோம்.

பாதி வழியில் ஆங்காங்கே எனது தோழிகள் உட்கார்ந்துவிட, அவர்களை உசுப்பி, நடக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.

அப்போதுதான் எதிர்பாராத விதமாக அந்த கார் எங்களை நோக்கி வந்தது. நிச்சயம் அது எங்கள் கண்களுக்கு கடவுள் வந்த வாகனமாகத்தான் தெரிந்தது. எங்கள் பக்கத்தில் வந்து நின்ற அந்த காரில் இருந்தவர் எங்களிடம் விசாரித்து எங்களது அவல நிலையை தெரிந்து கொண்டார். அவருடன் அவரது மனைவி மற்றும் சிறு குழந்தை மட்டுமே இருந்தது. எனவே அந்த காரில் எவ்வளவு பேர் ஏற முடியுமோ அவ்வளவு பேர் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

உடனடியாக எங்களில் நடக்க முடியாத பலரை அதில் ஏற்றி அனுப்பினோம். மீண்டும் எங்கள் நடை பயணம் தொடங்கியது.

நாங்களும் களைப்படைந்தோம். இருட்டத் துவங்கியது. பயம் ஆட்கொண்டது. என்ன ஆகப் போகிறதோ, எப்பொழுது வீடு போய் சேர்வோம் என்ற பயம்...

கொஞ்ச அதே வெ‌ள்ளை ‌நிற அ‌ம்பா‌சிட‌ர் கார் ஒன்று எதிர்பட்டது. அதைக் கண்ட நாங்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போனோம். ஆம் எங்களில் ஒரு சிலரை ஏற்றிச் சென்றதுதான் அந்த கார். விட்டுச் சென்ற எங்களையும் ஏற்றிக் கொள்ள மீண்டும் வந்திருக்கிறார் எந்த தெய்வம்.

எத்தனை பேர் அந்த காரில் ஏறினோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒரு இருக்கையில் சுமார் 4 பேராவது அமர்ந்திருப்போம். வண்டி புறப்பட்டது. போனது போனது.. சுமார் 30 நிமிடங்கள் வாகனத்தில் பயணித்திருப்போம். அப்போதுதான் உண்மையிலேயே எங்களுக்குள் இருந்த பயம் விஸ்வரூபம் எடுத்தது.

ஏன் தெரியுமா? இவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டுமா? என்ன ஆகியிருக்கும் எங்கள் நிலைமை... எத்தனை நாளிதழ்களில் எங்கள் செய்தி வந்திருக்கும் என்றெல்லாம் மனது அசை போட்டது.

அதற்குள் பேருந்து நிறுத்தம் வந்தது. காரில் இருந்து இறங்கியதும் அந்த தெய்வக் குடும்பத்திற்கு நன்றியை வார்த்தைகளில் சொல்லிவிட்டு எங்கள் ஊர்களுக்கான பேருந்தை தேடினோம்.

இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்ன தெரியுமா... எதிர்வரும் பிரச்சினைகளை கொஞ்சமும் அறியாமல் தடா நீர்வீழ்ச்சியை அனுபவித்த அந்த மனநிலையை எப்போதும் மறக்க முடியாது.

நிச்சயம் கடவுள் என்று உண்டு என்பதை அன்று தான் நான் நம்பினேன். இது கடவுள் செயல் அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.
வகைகள்: Blog