Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Family Filter | On
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

சிவசங்கரியைப் பற்றி வைரமுத்து!

பல வருட‌ங்களு‌க்கு மு‌ன்பு நா‌ன் படி‌த்து ர‌சி‌த்து சேக‌ரி‌த்து வை‌த்தது.



"பொறாமை, குற்றச்சாட்டு, வதந்தி - இவைகளெல்லாம் பாராட்டின் வெவ்வேறு வடிவங்கள் என்று விளங்கி வைத்திருக்கிறேன்."

சரி சரி சிவசங்கரி! மிகச் சரி.

இதைப் புரிந்து கொண்ட பிறகு இன்னும் என்னைப் பற்றிய போதுமான பொறாமைகளோ, வதந்திகளோ, குற்றச்சாட்டுகளோ வரவில்லையே என்று வருத்தப்பட ஆரம்பித்தேன் - வைரமுத்து.

போர்க்களத்தில் ஒரு கரம் போய்விட்டதா! சரி! ஒரு கரத்தால் யுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டு அதையும் புத்தகமாக்கிப் போர்க்களத்திலேயே விற்றுவிடும் புத்திசாலித்தனம்.

முள்ளில் நடந்து சென்று பூப்பரிக்கும் வைபவம் தான் வாழ்க்கை. ஆனால் மனிதா! முள்ளை மற! பூவை நினை! என்ற நம்பிக்கையின் குரல் சிவசங்கரியின் எழுத்துக்களில் உள்ளிருக்கும் நாதமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அந்த நம்பிக்கையை வாழ்க்கைப்படுத்துகிற வைராக்கியம் சிவசங்கரிக்குள் இலையில் பசுமை போல் இழைந்தே இருக்கிறது.

கண்களிலும் கன்னங்களிலும் கண்ணீர் நடந்து போன சுவடுகள். ஆனாலும் அந்தச் சுவடுகளின் மீதே நம்பிக்கை ஒன்று நடைபழகக் கண்டேன்.

தளர்சிதை மாற்றத்தால் கூட்டுப்புழுவான பட்டாம்பூச்சி வளர்சிதை மாற்றத்தால் மறுபடியும் பட்டாம்பூச்சியாகப் பறந்தது.
தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கும் வாய்மை; தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நேர்மை.

ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை அவள் துக்கத்தில் இருக்கும் போது கண்டுபிடித்து விடலாம்.

ஒரு மனிதனின் தாய்மொழியை அவன் தூக்கத்தில் பேசும்போது கண்டுபிடித்து விடலாம்.

ஒரு மனிதனின் ஒழுக்கத்தை அவன் இருட்டில் இருக்கும்போது கண்டுபிடித்து விடலாம்.

ஒரு படைப்பாளியின் நிஜத்தை அந்தப் படைப்புக்குள் இருக்கும் உள்ளார்ந்த ஒலியில் கண்டுபிடித்து விடலாம்.

பேனாவுக்குப் பிரசவ வலி எடுத்தால்தான் அதைத் தொடுவது என்று சங்கல்பம் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.

அநாவசியப் பேச்சும் வேண்டாம், தேவையற்ற ஈஷலும் வேண்டாம். எதுவுமே அளவோடு இருப்பது நல்லது. இல்லாவிட்டால் இன்று தலையில் தூக்கி வைத்துக் கொள்பவர் நாளைக்குக் காரணமேயில்லாமல் கீழே தள்ளிவிட வாய்ப்பு உண்டு."

"யாரையும் நாம் காயப்படுத்தக் கூடாது. அதே சமயம் எவரும் நம்மைக் காயப்படுத்த நாம் இடம் கொடுக்கக்கூடாது."
கைதுறப்பு