அந்த அச்ச உணர்வுடனே பயணத்தைத் துவக்கினேன். ஆட்டோக்காரரே ஒரு சில இடங்களில் பேச்சுக் கொடுத்தார். யாரும் அவ்வளவாக செவி சாய்க்கவில்லை.
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது.
மேம்பாலம் போக்குவரத்தை துவங்கினால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று கூறிக் கொண்டு வந்த ஆட்டோக்காரரின் கண்களில், மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் பளிச் மின்னொலி.
அடடா. இதைப் பார்த்தால் இன்னும் ஒரு வாரத்திலேயே திறப்பு விழா நடந்து விடும் போல் அல்லவா இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா என்றபடி, நான் சொந்த வீடு கட்டினால் கூட இந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்குமா என்று தெரியவில்லை என்று தனது ஆனந்தத்தைக் கொட்டினார்.
அங்கு அவரது முகத்தில் கண்ட அந்த ஆனந்தத்தை நான் இதுவரை எங்குமே பார்த்ததில்லை.
எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
இதற்குக் காரணம் இவ்வளவு காலம் இந்த சாலைப் போக்குவரத்தில் அவர் சிக்குண்டதா அல்லது அவரது இயல்பா தெரியவில்லை எனக்கு.

நினைவேறுகிறது…
மறுமொழிகள்