எல்லையில்லா ஆனந்தம் அடைந்த நாளும் அதுதான். அன்றில் இருந்து அந்த ஆனந்தம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.
முதன் முதலாக முகம் பார்த்து சிரித்த நாள்... அம்மா என்று அழுத நாள்... திரும்பி... தவழ்ந்து... உட்கார்ந்து... முட்டிபோட்டி... நேற்று நடந்து.... இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அவளால் நாங்கள் அடையும் ஆனந்தம் ஏராளம் ஏராளம்.
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் பாங்கு, தானே செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கை, எச்சரிக்கை உணர்வு, தவறை தெரியாமல் செய்யும் தந்திரம் என ரசித்து ரசித்து இன்னும் ரசித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
அவளது கண்கள்... அப்பப்பா பார்த்துக் கொண்டே இருக்கலாம். எல்லோரையும் வசிகரிக்கும் தோற்றம். வெளியில் சென்றால் சிலரையாவது தன் பக்கம் ஈர்த்து அவர்களை புன்னகைக்க வைக்கும் ஆற்றல் மிக்கவள்.
கோபம்.... சொல்லவே வேண்டாம். அடிவாங்கிய பல பேர் இருக்கிறார்கள்...
இது அவளைப் பற்றிய துவக்கம் தான்... இன்னும் நிறைய இருக்கிறது குறும்புகள் ஏராளம்.

நினைவேறுகிறது…
மறுமொழிகள்