Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

மனிதன் - பாரதி



பார‌தி‌யி‌ன் எழு‌த்து‌க்க‌ளி‌ல்தா‌ன் எ‌த்தனை வ‌லிமை, அதனை எ‌ப்போது‌ம் படி‌த்து ர‌சி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது வழ‌க்க‌ம். அ‌தி‌ல் ஒ‌ன்று இ‌ங்கே...

`மனிதன்' என்றே தலைப்பிட்டு, நம்மையெல்லாம் விமர்சிக்கிறான் பாரதி.

"நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை
விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம்.
என்பது தெரியும்.

வஞ்சனையாலும், சூத்திரத்தாலும்
சமயத்திற்கேற்ப பலவிதமான கபடங்கள்
செய்து ஜீவிப்பவன் நரிதானே?

ஊக்க மில்லாமல் ஏதேனு மொன்றை
நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து
தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன்
தேவாங்கு.

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு
செய்பவன் பாம்பு.

தர்மத்திலும் புகழிலும், விருப்பமில்லாமல்
அற்பசுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

சுயாதீனத்திலே இச்சையில்லாமல்,
பிறருக்குப் பிரியமாக நடந்து கொண்டு,
அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு
வளர்ப்பவன் நாய்.

கண்ட விஷயங்களிளெல்லாம்
திடீர் திடீரென்று கோபமடைகிறவன்
வேட்டை நாய்.

காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து
கொண்டு ஆங்கிலேய அதிகாரிகளுக்கும்
இதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடையவன்
வெளவால்.

அறிவுத் துணிவில் பெரும் பொருள்களைத்
தேர்ந்த கொள்ளாமல், முன்னோர் சாஸ்தி
ரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால்
சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.

பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக
நடத்திய போதிலும் அவன் அக்கிரமத்தை
நிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால்
பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை.

வீண் மினுக்கு மினுக்கி டம்பம்
பாராட்டுகிறவன் வான் கோழி.

கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்
திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண்.

தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை
அபகரித்து உண்ணுபவன் கழுகு.

ஒரு நவீன உண்மை வரும்போது, அதை
ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல்
வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு
அஞ்சும்) ஆந்தை.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித்
தர்மத்தை ஆதரித்து பரமார்த்தத்தை அறிய
முயலுகிறவனே மனித னென்றும் தேவனென்றும்
சொல்வதற்குரியவனாவான்.
கைதுறப்பு