Web Webdunia.com தமிழ் உலகம்
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 நினைவேறுகிறது…

• ‌நிறு‌த்‌தி‌விடா‌தீ‌ர்க‌ள் தாய்ப்பாலை

தாய்ப்பால்.... இதைப்பற்றிக் கேட்டால் எல்லாருமே ஆஹா ஓஹோ என்று சொல்வார்கள்.. அதன் அவசியம் பற்றி எல்லோருமே அறிவர்...

ஆனால் இதை நான் உணர்வு பூர்வமாக உணர்ந்ததை இங்கு சொல்கிறேன்.

என் குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகிறது. நான் வேலை செய்து கொண்டிருப்பதால் தாய்ப்பாலை நிறுத்தும்படி பலர் அறிவுறுத்தி விட்டார்கள்... ஆனால் நானோ முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.

மருத்துவரிடம் ஆலோசித்ததில் 2 வயது வரை கொடுங்கள் என்று ஆலோசனை கூறினார். அதில் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தேன்.

கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு... குழந்தை எதை சாப்பிட்டாலோ.... என்ன ஒத்துக்கலையோ தெரியலை..... பயங்கர பேதி. இரவு முழுவதும் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு படாத பாடு பட்டாச்சு... தண்ணீர் தண்ணீராய் போனது.... வேறு ஆகாரம் எதுவும் இல்லை தாய்ப்பாலைத் தவிர.

குழந்தை மிகவும் இளைத்துப் போனாள். ஆனாலும் அவளது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் இருந்தால். அவளுக்கு பார்க்கும் மருத்துவரை அதிகாலையிலேயே போய் பார்த்தால் அவரும் இல்லை. மாலை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதற்குள் ஒரு வழியாக கை வைத்தியம் செய்து பேதியை கட்டுப்படுத்தினோம்.

மாலையில் மருத்துவரை சந்திக்கச் சென்ற போது நடந்தவற்றைக் கூறினோம். அவர் ஆச்சரியத்துடன் குழந்தையின் நடவடிக்கையில் ஏந்த மாற்றமும் இல்லையே... அவள் எப்போதும் போல் விளையாடுகிறாளா என்று கேட்டார். ஆம் என்றோம்.

அதற்கு அவர் கூறிய பதில், பொதுவாக நீங்கள் சொல்வது போல் பேதியாகும் குழந்தைகள் மிகவும் துவண்டு போய்விடும். தண்ணீர் சத்து குறைந்து நாக்கு வறண்டு இருக்கும். அந்த அறிகுறிகள் எதுவும் இந்த குழந்தைக்கு இல்லை. நீங்கள் இன்று முழுவதும் தாய்பால் கொடுத்துக் கொண்டே இருந்தீர்களா என்று கேட்டார்.

ஆம் என்றதற்கு.... அதுதான் காரணம்.. இப்போதெல்லாம் ஒரு வயது குழந்தைக்கு தாய் பால் நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு. அந்த குழந்தைகளுக்கு எந்த எதிர்ப்பு சக்தியும் இருக்காது. ஆனால் நீங்கள் இன்று முழுவதும் பால் கொடுத்ததால்தான் இந்த குழந்தை இன்னும் ஆற்றலுடன் இருக்கிறாள். இல்லையென்றால் இன்று இவளை மருத்துவமனையில் அனுமதித்து ட்ரிப்ஸ் ஏற்றியிருப்போம். ஆனால் அது இவளுக்கு தேவையில்லை என்று கூறி ஒரு சில குளுக்கோஸ் போன்ற மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.

அந்த நிமிடம் தாய்ப்பாலின் அருமையை நான் உணர்வு பூர்வமாக அறிந்தேன்.

வகைகள்: கட்டுரை